தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பத்ம விருது வழங்கும் விழாவில் ரியோ பாராலிம்பிக்ஸ் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு, தீபா மாலிக், விகாஸ் கவுடா, சேகர் நாயக், ஆகியோருக்கும் பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.


மேலும் இந்த விழாவில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி, ஹாக்கி வீரர் ஸ்ரீஜேஷ், ரியோ ஒலிம்பிக் வீரர்கள் சாக்ஷி மாலிக், உடற்பயிற்சியாளர் திபா கர்மாகர் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.


இந்நிலையில் நேற்று குடியரசுத்தலைவர் மாளிகையில் நடந்த விருது வழங்கும் விழாவில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் கையால் பத்மஸ்ரீ விருதை மாரியப்பன் தங்கவேலு பெற்றார்.