11-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் முதலாவது அரைஇறுதியில் இங்கிலாந்து அணி, தென்ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா முதலில் பேட் செய்ய தேர்வு செய்தது. 50 ஓவர்களில் தென்ஆப்பிரிக்க அணி 6 விக்கெட்டுக்கு 218 ரன்கள் எடுத்தது. 


அடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணி 49.4 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 221 ரன்கள் சேர்த்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிக்கனியை பறித்து 5-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. 


இன்று நடக்கும் 2-வது அரைஇறுதியில் இந்தியா - ஆஸ்திரேலியா பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி காணும் அணியை 23-ம் தேதி லண்டன் லார்ட்சில் நடக்கும் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து சந்திக்கும்.