இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி நேற்று இமாச்சலப்பிரதேச தலைநகர் தரம்சாலாவில் நடைபெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் திசரா பெரேரா பௌலிங் தேர்வு செய்தார். இந்திய ஒரு நாள் அணிக்கு ரோகித் முதல் முறையாக கேப்டனாக களமிறங்கினார். 


இந்திய அணியில் ரகானே நீக்கப்பட்டதால் ஸ்ரேயாஸ் ஐயர் (அறிமுகம்) இந்த ஒரு நாள் போட்டியில் வாய்ப்பு பெற்றார்.


முதலில் களமிறங்கிய ஷிகர் (0) மற்றும் ரோகித் (2) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.


இலங்கை பவுலர்களின் பந்துவீச்சில் இந்திய அணியில் அனைவரும் மாறி மாறி ஆட்டமிழந்தனர். தினேஷ் கார்த்திக் ரன் எடுக்காமல் திரும்பினார். மணிஷ் பாண்டேவை (2) வெளியேறினார்.


அறிமுக வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்ட்யா (1௦) அணியை கைவிட்டார். சக வீரர்கள் வழியில், புவனேஷ்வரும் (0) திரும்பினார். பின், இணைந்த தோனி 65 ரன் குவித்து ஆட்டமிழந்தார். குல்தீப் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். சச்சித் சுழலில் பும்ரா டக் அவுட்டானார். சகால் (0) அவுட்டாகாமல் இருந்தார்.


இறுதியில் இந்தியா 38.2 ஓவர்களில் 112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக டோனி 65 ரன்கள் எடுத்தார். 


அதன்பின், 113 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை பேட்டிங் செய்தது. முதலில் குணதிலகா, உபுல் தரங்கா ஆகியோர் களமிறங்கினர். இலங்கை அணி ஸ்கோர் 7 ஆக இருக்கும்போது பும்ரா பந்துவீச்சில் குணதிலகா ஆட்டம் இழந்தார். 


அவரைத் தொடர்ந்து வந்த திரிமன்னே ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானார். அவரை தொடர்ந்து களமிறங்கிய மேத்யூஸ் நிதானமாக விளையாடினார். சிறப்பாக விளையாடிய உபுல் தரங்கா 49 ரன்களில் பாண்ட்யா பந்தில் ஆட்டம் இழந்தார். 


அதன்பின், களமிறங்கிய டிக்வெலா, மேத்யூசுடன் இணைந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். இலங்கை அணி 20.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேத்யூஸ் 25 ரன்களுடனும், டிக்வெலா 26 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர்.