இந்தியா, இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று விசாகப்பட்டனத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா அணி முதலில் பவுலிங் தேர்வு செய்து உள்ளனர். அதன் படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா வந்துள்ள இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு போட்டிகள் முடிவில், தொடர் 1-1 என, சம நிலையில் உள்ளது. தர்மசாலா ஆடுகளத்தில் பேட்டிங் தள்ளாடிய இந்திய அணி வீரர்கள், மொகாலியில் வெளுத்து வாங்கி வென்றனர். 


இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி, விசாகப்பட்டனத்தில் நடக்கிறது. டாஸ் வென்ற இந்தியா அணி முதலில் பவுலிங் தேர்வு செய்து உள்ளனர்.