நாக்பூர்: இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மூன்று டி-20 ஓவர் தொடரில் கான்பூரில் நடந்த முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டி-20 ஓவர் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் நாளை நடக்கிறது.


வெற்றி பெற வேண்டிய கட்டாயமான இந்த ஆட்டத்தில் இந்திய வீரர்கள் அனைவரும் தங்களது முழு திறனை வெளிப்படுத்துவார்கள்.


இங்கிலாந்து அணி நாளைய போட்டியிலும் இந்தியாவை வீழ்த்தி தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.


இரு அணிகளும் சமபலத்துடன் மோதுவதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.


இரு அணிகளும் நாளை மோதுவது 10-வது டி-20 ஓவர் ஆட்டமாகும். இதுவரை நடந்த 9 ஆட்டத்தில் இந்தியா 3 போட்டியிலும், இங்கிலாந்து 6 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. 


நாளைய ஆட்டம் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.