இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சுற்றுப்பயணத்தின் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடேயேயான இரண்டாவது போட்டி ஆகஸ்ட் 9 ஆம் நாள் துவங்குவதாக இருந்தது. ஆனால் மழையின் காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது.


இந்நிலையில், இன்று போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங்கை தொடங்கி ஆடி வருகிறது. இந்திய அணி ஆரம்பமே ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர். ஆம் ரன் எதுவும் எடுக்காமல் முரளி விஜய்(0) அவுட் ஆனர். அடுத்து 8 ரன்கள் எடுத்த நிலையில் லோகேஷ் ராகுல் கேட்ச் அவுட் ஆனர். தற்போது நிலவரப்படி 10 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து இந்திய அணி ஆடு வருகிறது.