இலங்கை அணிக்கு எதிரான இந்திய சுற்றுபயணத்தில் இந்திய 3 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. அதன் இரண்டாவது போட்டியில் நேற்று காலை கொழும்புவில் துவங்கியது. டாஸ் வென்று இந்தியா அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேற்றைய ஆட்டநேர முடிவில் பூஜார மற்றும் ரஹானே ஆகியோரின் சதத்தினால் இந்திய தனது இரண்டாவது டெஸ்டில் 3 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் எடுத்தது.


இலங்கைக்கு எதிரான பரபரப்பான இரண்டாவது டெஸ்டில் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று காலை 10 மணி அளவில் துவங்கியது. இரண்டாம் நாள் ஆட்டமான இன்று அஸ்வின்(54 ரன்கள்) மற்றும் சஹா(67 ரன்கள்) -வின் அரை சதத்தினால் 500 ரன்களை தாண்டியது. மேலும் ஜடேஜாவின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா 500 ரன்களை தாண்டியது. ஜடேஜா 70(85) ரன்கள், உமேஷ் யாதவ் 8(9) ரன்கள் எடுத்து களத்தில் உள்ளனர். இந்நிலையில் இந்தியா 158 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 622 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. 


 



 


இதனையடுத்து, இலங்கை தனது முதல் இன்னிங்க்சை விளையாடி வருகிறது. தொடக்க ஆட்டக்கார்களாக டிமுத் கருணாரத்னே மற்றும் உபுல் தரங்க
களம் இறங்கினார்கள். அஸ்வின் வீசிய 2_வது ஓவரின் கடைசி பந்தத்தில் உபுல் தரங்க(0) கேட்ச் அவுட் ஆனார். 


 



 


தற்போதைய நிலவரப்படி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், இலங்கை அணி 2 விக்கெட் இழப்புக்கு 20 ஓவரில் 50 ரன்கள் எடுத்துள்ளது, மென்டிஸ் 16(48) மற்றும் சந்திமல் 8(21) ரன்களுடன் களத்தில் உள்ளனர்.