2018-ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராரக விராட் கோலியின் பெயரை ICC அறிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆண்டுதோறும் சிறந்த வீரர்களை கொண்ட கனவு அணியை ICC அறிவிப்பது வழக்கம். அந்த வகையில் 2018-ஆம் ஆண்டிற்கான ICC கனவு அணி, சிறந்த வீரார்களின் பெயரினை ICC இன்று அறிவத்துள்ளது. 



ICC டெஸ்ட், ஒருநாள் கனவு அணி என இரு அணிகளுக்கும் தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி அறிவிக்கப்பட்டுள்ளார். அதுமட்டும் அல்லாமல்., 2018-ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர், 2018-ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் ஆட்டகாரர், 2018-ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் ஆட்டகாரர் என்னும் பெருமையினையும் கோலி பெற்றுள்ளார்.


2018-ஆம் ஆண்டில் 1,202(133.55 சராசரி) ஒருநாள் ரன்களை குவித்துள்ள விராட் கோலி, மிக குறைந்த சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 10000 ரன்களை குவித்து சாதனை படைத்துள்ளார். அதே வேலையில் டெஸ்ட் போட்டிகளை பொருத்தவரையில் 55.08 சராசரியுடன் 1322 டெஸ்ட் ரன்களை குவித்துள்ள விராட் கோலி, ICC கனவு அணியின் தலைவராக முதல் முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.