இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அனில் கும்ப்ளே அறிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய அணியின் பயிற்சியாளராகக் கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் அனில் கும்ப்ளே நியமிக்கப்பட்டார். தற்போது அவர் தனது ராஜினாமா கடிதத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அனுப்பிவிட்டதாக டுவிட்டரில் அணில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். இதனால் மேற்கு இந்திய தீவுகளுக்கு செல்லும் இந்திய அணியுடன் அனில் கும்ப்ளே செல்லவில்லை.


இந்திய அணியின் கேப்டன் விராத் கோலிக்கும், பயிற்சியாளர் கும்ப்ளேவுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக உறவு சரியில்லாமல் மோதலில் இருந்து வந்தது. தொடர்ந்து இதே சூழலில் பணியாற்ற முடியாத நிலையில், அனில் கும்ப்ளே தனது பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்தார். 


ஐசிசி கமிட்டியின் உறுப்பினராக இருக்கம் கும்ப்ளே 23-ம் தேதி நடக்கும் அந்த கூட்டத்தில் கொள்கிறார்.