இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ICC கிரிக்கெட் கோப்பை 2021-க்கு தகுதி பெற்றுள்ளதாக கிரிக்கெட் நிர்வாக குழு புதன்கிழமை அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மற்றும் "இது போட்டி சாளரத்தின் போது நடைபெறவில்லை, ICC மகளிர் சாம்பியன்ஷிப் தொழில்நுட்பக் குழு (TC) ICC மகளிர் சாம்பியன்ஷிப்பில் மூன்று தொடர்களிலும் புள்ளிகள் பகிர்ந்து கொள்ளும் என்று முடிவு செய்துள்ளது," என்று ICC ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.


ICC மகளிர் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக இருக்கும் பாகிஸ்தானுக்கு எதிராக இருதரப்பு தொடரில் இந்தியா பங்கேற்க அனுமதிக்க தேவையான அரசாங்க அனுமதிகளை பெற முடியவில்லை என்பதை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) நிரூபித்ததை அடுத்து, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான தொடரை `போர்ஸ் மஜூர்' நிகழ்வின் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது எனவும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.


மேலும், கொரோனா வைரஸ் தொற்று தென்னாப்பிரிக்கா- ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை - நியூசிலாந்து இடையே நடத்தவிருந்தது இரண்டு கடைசி சுற்று போட்டிகளின் தொடர்களை ரத்து செய்ய கட்டாயப்படுத்தியது.


இதன் காரணமாக தற்போது உலகக் கோப்பை 2021-இன் புரவலர்களான நியூசிலாந்து மற்றும் ICC மகளிர் சாம்பியன்ஷிப் புள்ளிகள் அட்டவணையில் மிக உயர்ந்த நான்கு அணிகளும் முதன்மையான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த புதிப்பிப்பின் படி 37 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது, இங்கிலாந்து (29), தென்னாப்பிரிக்கா (25), இந்தியா (23). பாகிஸ்தான் (19), நியூசிலாந்து (17), மேற்கிந்திய தீவுகள் (13), இலங்கை (5) ஆகியவை அட்டவணையை நிறைவு செய்தன.


ICC மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை தகுதி போட்டிகள் ஜூலை 3-19 முதல் இலங்கையில் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது, எனினும் இது கோவிட் -19 தொற்றுநோயால் மதிப்பாய்வு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.