ஊக்க மருந்து சர்ச்சையில் ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்ககேற்கயிருந்த இந்திய தடகள வீரர் ஒருவர் சிக்கியிருக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குண்டு எறிதலில் ஆசிய அளவில் கோப்பைகள் பெற்றவர் இந்திரஜித். இவர் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா தரப்பில் செல்ல இருக்கும் வீரர்களில் ஒருவர் ஆவார். இவருக்கு நடத்தப்பட்ட ஊக்க மருந்து சோதனையில் தோல்வி அடைந்துள்ளார். இதனால் இவர் போட்டியில் பங்கேற்க முடியாமல் போயுள்ளது. 


கடந்த சில நாட்களுக்கு முன்னர் மல் யுத்த வீரர் நரசிங் மீதும் ஊக்க மருந்து புகார் கிளம்பியுள்ளது. அதேபோல் இந்திரஜித்தும் சிக்கியுள்ளார்.