தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்நிலையில் நாளை இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த டெஸ்ட் தொடரில் முதல் போட்டி  கேப்டவுன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 208 ரன்கள் மட்டும் தேவை என்ற நிலையில், இந்திய அணி 135 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 72 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது வெற்றியை பறிகொடுத்து. டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா அணி முன்னிலை வகிக்கிறது.


#INDvSA முதல் டெஸ்ட்: 3 ஓவரில் 3 விக்கெட் அசத்திய புவனேஸ்வர் குமார்


இந்நிலையில், தென் ஆப்பிரிக்க அணியின் ஆதிக்கம் நிறைந்த சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நாளை நடக்கும் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி எப்படி தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொள்ளும் என அனைவரும் எதிர்நோக்கி உள்ளனர்.


செஞ்சூரியனில் சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்றுள்ள 22 டெஸ்ட் போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா 17 வெற்றியும், 2 தோல்வியும், 3 டிரா என ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இதே மைதானத்தில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி தழுவியுள்ளது.


ஐபிஎல் 2018: எந்த அணி? எந்த வீரரை? தக்கவைத்து கொண்டது -விவரம் உள்ளே!!


2-வது டெஸ்டுக்கான இந்திய அணியில் ஷிகர் தவானுக்கு பதிலாக லோகேஷ் ராகுல் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.