இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பஞ்சாப் மொஹாலி மைதானத்தில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பவுலிங் தேர்வு செய்து உள்ளனர். அதன் படி இந்திய அணி முதலில் 'பேட்டிங்' செய்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எனவே தனது ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி நிதானமாக ஆடியது. 115 ரன்னுக்கு தான் இந்தியாவின் முதல் விக்கெட் வீழ்ந்தது. ஷிகார் தவான் 68(67) ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். பின்னர் கேப்டன் ரோஹித் ஷர்மாவுடன் சேர்ந்து ஷிரியாஸ் ஐயர் ஆடி வருகின்றார்.


நன்றாக விளையாடி வரும் கேப்டன் ரோஹித் ஷர்மா 65 பந்துகளில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். இதில் ஐந்து பவுண்டரிகள் அடங்கும். இது இவருக்கு 35_வது அரை சதமாகும். மறுமுனையில் ஷிரியாஸ் ஐயர் 50(50) தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார்.


தொடந்து ஆடிய ரோஹித் சர்மா தனது சதத்தை பூர்த்தி செய்தார். 173_வது ஒருநாள் போட்டியில் விளையாடும் ரோஹித் சர்மா தனது 16_வது சதத்தை நிறைவு செய்தார். இவர் ஏற்கனவே இரட்டை சென்சூரி அடித்துள்ளார். இதுவரை இவர் ஒரு நாள் போட்டியில் 6308 ரன்களை கடந்துள்ளார். 


இந்தியா 40 ஓவருக்கு ஒரு விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் எடுத்து தொடர்ந்து ஆடி வருகிறது.


இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இமாச்சல்பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.