இந்திய - தென்னாப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையேயான 5-வது டி20 போட்டியில் இந்தியா 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று தொடரை வென்றது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி, 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. 


இத்தொடரின் 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று கேப்டவுன் மைதானத்தில் நடைப்பெற்றது. டாஸ் வென்ற இந்தியா அணி நிர்ணயிக்கப் பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் குவித்தது. 


இந்தியா தரப்பில் மித்தாலி ராஜ் 62(50) ரன்கள் குவித்து அணிக்கு பலம் சேர்த்தார். பின்னர் 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 54 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.



இந்நிலையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 3-1 என்ற கணக்கில் வெற்றிப் பெற்று தொடரை வென்றது!