10-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐ.பி.எல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் லயண்ஸ் அணிகள் பலப்பரிட்ச்சை நடத்தின. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஸன், மெக்கல்லம் ஆகியோர் களமிறங்கினர்.


அதிரடி ஆட்டக்காரர் மெக்கல்லம் 6 ரன்களில் வெளியேறி ரசிகர்களை ஏமாற்றினார். ஆனால், மற்றொரு தொடக்க வீரரான இஷான் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். 


20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ரன்களை அந்த அணி எடுத்தது. மும்பை அணி சார்பின் ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளும், மலிங்கா, பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.


154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் பார்தீவ் படேல் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். 


இறுதி பந்தில் 7 ரன்கள் எடுத்தால் என்ற நிலையில் மெக்கல்லம்-ஆல் ஒரு ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், பரபரப்பான இப்போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றது.