நேற்று இரவு 8 மணிக்கு கான்பூரில் நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி வீழ்த்தியது. 


இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் குவித்தது. அந்த அணி வீரர் சாஹா 55 பந்துகளில் 93 ரன்களை விளாசினார். மேக்ஸ்வெல் 21 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார்.


இதனையடுத்து 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்களை எடுத்து தோல்வியுற்றது. மும்பை அணியை தோற்கடித்ததன் மூலம் ப்ளேஆஃப் சுற்றுவாய்ப்பை பஞ்சாப் அணி தக்க வைத்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.