வரும் IPL 2018 தொடரில் டெல்லி அணியின் தலைவராக கவுதம் கம்பீர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

IPL தொடரின் 11-வது சீசன் வரும் ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளது. இதற்காக அறிவிக்கப்பட்ட அணிகள் அனைத்தும் ஆயுத்தமாகி வருகின்றன. கடந்த சில தினங்களாக அணிகள் அனைத்தும் தங்கள் அணி பொருப்பு வீரர்களின் பட்டியலை அறிவித்து வருகின்றன.



அந்த வகையில் இன்று டெல்லி ட்ரேடெவில்ஸ் அணியின் அணி தலைவராக கவுதம் கம்பீர் அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னதாக கடந்த 2010 ஆம் ஆண்டு டெல்லி அணியை விட்டு கொல்கத்தா அணிக்கு சென்ற கவுதம், கொல்கத்தா அணியின் தலைவராக இருந்தார்.


முன்னதாக இவர் டெல்லி அணிக்காக 3 முறை விளையாடிய போதிலும், நீண்ட இடைவெளிக்கு பின்னர் அவர் மீண்டணும் அந்த அணிக்கே செல்வது ஆத்ம திருப்தி அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.