India vs South Africa 2021: ஒருநாள் போட்டித் தலைவராக விராட் கோலி தொடர்வாரா என்பது குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் முடிவு எடுப்பார்கள். விராட் கோலி ODI கேப்டனாக தொடர்வாரா என்பது கூடிய விரைவில் முடிவு செய்யப்படும். தென்னாப்பிரிக்கவுக்கு செல்லும் அணி தொடர்பான பட்டியல் இந்த வாரம் வெளியாகும்போது, எதிர்பார்ப்புகள் முடிவுக்கு வரும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சேத்தன் ஷர்மா தலைமையிலான தேசிய தேர்வுக் குழு, தென்னாப்பிரிக்காவுக்கு வரவிருக்கும் சுற்றுப்பயணத்திற்கான அணியைத் தேர்ந்தெடுக்கும் போது, ​​இந்த வாரம் இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக விராட் கோலியின் எதிர்காலம் முடிவு செய்யப்படும். 


இந்தியாவின் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் (South Africa Tour) முன்னதாகவே திட்டமிடப்பட்டிருந்தாலும், அந்த நாட்டில் புதிய COVID-19 வெரியண்டான ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் இந்த சுற்றுப்பயணம் நடைபெறுமா என்ற கேள்விகளும் எழுந்துள்ன.


ALSO READ | இந்திய அணி தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் பங்கேற்பது கேள்விக்குறி


ஆஸ்திரேலியாவில் T20I போட்டிகள் 2022ம் ஆண்டில் நடத்த திட்டமிடப்பட்டுள்ல நிலையில், அடுத்த ஏழு மாதங்களில் வெளிநாட்டில் ஆறு (தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்தில் தலா மூன்று) மற்றும் இந்தியாவில் மூன்று என ஒன்பது ODIகள் மட்டுமே உள்ளன. பயோ-பபிள் இருக்கும் என்பதால், அதிக வீரர்கள் கொண்ட ஜம்போ ஸ்குவாட் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து சாத்தியக்கூறுகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, அணியில் 20 முதல் 23 பேர் இடம் பெறலாம்.


பிசிசிஐயில் தற்போது இரண்டு விதமான எண்ணப்போக்கு காணப்படுகிறது. இன்னும் சில ஒருநாள் போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ளதால் கோஹ்லியே கேப்டனாக தொடர அனுமதிக்கலாம் என்று கூறப்படுகிறது. 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவிருக்கும் ODI உலகக் கோப்பைக்கு தீவிர தலைப்பு போட்டியாளர்களாக இருக்கக்கூடிய ஒரு சக்திவாய்ந்த அணியை தயார் செய்ய போதுமான நேரத்தை வழங்க வேண்டும் என்பதால், ரோஹித் சர்மா ஒரு நாள் போட்டிகளுக்கான கேப்டனாக அறிவிக்கப்படலாம்.
 
இந்த இரண்டு விதமான கருத்துக்கள் தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டு வரும் நிலையில், இறுதி முடிவை எடுப்பது பிசிசிஐயின் தலைவர் சவுரவ் கங்குலி (BCCI Sourav Ganguly) மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோரின் கையில் தான் இருக்கிறது. கோஹ்லியால் பட்டங்களைப் பெற்றுத் தரமுடியவில்லை என்பது அவருக்கு பின்னடைவாக உள்ளது. 


READ ALSO | தோனிக்கு பிறகு இவர்தான் CSK கேப்டன்


”அடுத்த சில நாட்களில் இந்திய அணி அறிவிக்கப்படும். அனைத்தும் தயார் செய்யப்பட்ட பின்னர் அரசாங்கத்தின் ஒப்புதலுக்காக காத்திருப்போம். ஒமிக்ரான் தொற்றினால் பயணத்தை கைவிடுமாறு அரசாங்கம் அறிவுறுத்தினால், அதற்கும் தயாராகவே இருக்கிறோம். ஆனால் அணியைத் தேர்ந்தெடுத்து தயாராக வைத்திருக்க வேண்டியதும் அவசியமாகிறது, ” என்று பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் புதன்கிழமையன்று  பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.


இந்த வாரம் சனிக்கிழமையன்று, கொல்கத்தாவில் BCCIயின் AGM கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில், சேத்தன் மற்றும் நிறுவனத்தின் பதவிக்காலத்தை புதுப்பிப்பது நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக உள்லது.
 
 சுற்றுப்பயணத்திற்கு எதிராக இந்திய அரசாங்கத்திடமிருந்து குறிப்பிட்ட அறிவுறுத்தல் ஏதும் வராவிட்டால், பிசிசிஐ மற்றும் கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா ஆகியவை முழு தொடரையும் விளையாடும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், மூன்று டெஸ்ட் தொடர் ஒரு போட்டியாக குறைக்கப்படலாம் என்றும் தெரிய வந்துள்ளது.  


READ ALSO | CSK-வில் தோனிக்கு 2-ம் இடம் ஏன்? சுவாரஸ்ய தகவல்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR