கொரியாவில் நடந்து வரும் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஜூனியர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்றுள்ளார் இந்தியாவின் சௌரப் சவுத்ரி. இவர் சென்ற வாரம் முடிந்த ஆசிய கோப்பை போட்டியிலும் தங்கம் வென்று அசத்தினார். தற்போது மீண்டும் உலக சாம்பியன்ஷிப்பிலும் தங்கம் வென்று சாதித்துள்ளார். இதில் தான் முன்பு செய்த சாதனையை தானே முறியடித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரியாவில் நடந்து வரும் உலக சாம்பியன் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் சௌரப் சவுத்ரி 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் 245.5 புள்ளிகள் பெற்று முதல் இடம் பிடித்து தங்கம் வென்றார். மேலும் இந்த பிரிவில் உலக சாதனை செய்துள்ளார். இவர் சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய விளையாட்டில் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


அதேபோல இதே பிரிவில் அர்ஜுன் சிங் சேமா வெண்கலப் பதக்கத்தை வெனறார். இவர் 218.0 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்தார்.