கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்திற்கு பிசிசிஐ விதித்த வாழ்நாள் தடையை நீக்கி கேரள ஐகோர்ட் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த, 2013-ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது நடந்த மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வாழ்நாள் தடை விதித்து பிசிசிஐ உத்தரவிட்டிருந்தது. இந்த தடையை நீக்குமாறு ஸ்ரீசாந்த் வைத்த கோரிக்கையையும் பிசிசிஐ நிராகரித்தது.


பிசிசிஐ-யின் தடையை எதிர்த்து ஸ்ரீசாந்த் சார்பில் கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த ஐகோர்ட், ஸ்ரீசாந்த் மீதான தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது. வழக்கில் தனக்கு வெற்றி கிடைத்தது தொடர்பாக டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள ஸ்ரீசாந்த், இந்த விவகாரத்தில் தனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.