IPL 2019 தொடரின் 22-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

IPL 2019 தொடரின் 22-வது லீக் அட்டம் இன்று மொஹாலி மைதானத்தில் நடைப்பெற்றது. பஞ்சாப் - ஹைதராபாத் அணிகள் மோதிய இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்து விளையாடியது.


ஹைதராபாத் அணி தரப்பில் துவக்க வீரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர் அதிரடியாக விளையாடி 70(62) ரன்கள் குவித்தார். எனினும் மறுமுனையில் களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறினர். விஜய் சங்கர் மட்டும் 26(27) ரன்கள் குவித்து அணிக்கு பலம் சேர்த்தார். 


இதனையடுத்து ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது.


துவக்க வீரராக களமிறங்கிய கிறிஸ் கெயில் 16(14) ரன்களில் வெளியேற, மறுமுனையில் லோகேஷ் ராகுல் நிதானமாக விளையாடி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 71(53) ரன்கள் குவித்தார். இவருக்கு துணையாக மயங்க் அகர்வால் 55(43) ரன்கள் குவித்து வெளியேறினார்.


ஆட்டத்தின் இறுதி ஓவரில் ஒரு பந்து மீதம் இருந்த நிலையில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் குவித்தது. இப்போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி 8 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.