இலங்கை கிரிக்கெட் அணியின் t20 போட்டிகளுக்கான கேப்டன் லசித் மலிங்க சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேற்றைய தினம் நடைப்பெற்ற தென்னாபிரிக்கா அணியுடனான இரண்டாவது t20 போட்டியில் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.


இந்த போட்டியை அடுத்து கருத்து வெளியிடும் போதே மலிங்கா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


இதுகுறித்து மலிங்க தெரிவிக்கையில்,... இவ்வாண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலக கோப்பை போட்டிகளுடன் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.


மேலும் 2020-ஆம் ஆண்டு அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள t20 உலக கோப்பை போட்டியுடன் தான் t20 அரங்கில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.


35 வயதுடைய லசித் மலிங்க நேற்று இடம்பெற்ற தென்னப்பிரிக்கா அணியுடனான போட்டியில் ரீசா ஹென்றிஸ் இன் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் t20 போட்டிகளில் 97 விக்கெட்களை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.