பிரபல டென்னிஸ் வீரரான லியாண்டர் பயஸ் பிரபல மாடலும், நடிகையுமான, மும்பையைச் சேர்ந்த ரியா பிள்ளை என்பவருடன் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்தார். எட்டு ஆண்டுகள் நீடித்த அவர்களின் வாழ்க்கையில், 2014-ல் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து ரியா பிள்ளை, லியாண்டர் பயஸூக்கு எதிராக மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ரஷ்யா - உக்ரைன் போரை முன்பே கணித்தாரா ஜோப்ரா ஆர்ச்சர்?


குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்ட இந்த வழக்கில் நிவாரணம் வழங்க வேண்டும் என கோரியிருந்தார். 8 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கில் மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிபதி கோமல்சிங் ராஜ்புத் வழங்கியிருக்கும் அந்த தீர்ப்பில், ரியா பிள்ளையுடன் சேர்ந்து வாழ்ந்த லியாண்டர் பயஸ் குடும்ப வன்முறையில் ஈடுபட்டது உறுதியாகியிருப்பதாக தெரிவித்துள்ளது. 


மேலும் படிக்க | 2022 Commonwealth Games: ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மீராபாய் சானு காமன்வெல்த் போட்டிக்கு தகுதி


இதனால், ரியா பிள்ளையின் வீட்டு வாடகைக்கு மாதந்தோறும் 50 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் பராமரிப்பு செலவுக்காக ஒரு லட்சம் ரூபாயும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ரியா பிள்ளை லியாண்டர் பயஸூடன் சேர்ந்து வாழ விரும்பினால் இந்த தொகை எதுவும் வழங்கத் தேவையில்லை. பிரிந்து வாழு விரும்பும்பட்சத்தில் லியாண்டர் பயஸ் மாதந்தோறும் இந்த தொகையை வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR