மக்காவ்: சீனாவின் பகுதியான மக்காவ் பிராந்தியத்தில், மக்காவ் ஓபன் கிராண்ட் பிரிக்ஸ் கோல்ட் பேட்மிண்டன் போட்டி நடைபெற்றுவருகிறது. இதில், இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் வீராங்கனை சாய்னா நேவால் மற்றும் இந்தோனேசியாவின் தினார் தியா ஆஸ்டினை எதிர்கொண்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சர்வதேச போட்டிக்கு திரும்பியுள்ள சாய்னா நேவால், முதல் செட்டில் தோல்வி அடைந்தார். ஆனால், அதன்பின்னர் தனது அனுபவ ஆட்டத்தினால் அடுத்த இரண்டு செட்களையும் கைப்பற்றி அசத்தினார். இறுதியில், 17-21, 21-18, 21-12 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.


இப்போட்டியின் முதல்தர வீராங்கனையான சாய்னா, தனது முதல் சுற்று ஆட்டத்தில் இந்தோனேசியாவின் ஹன்னா ராம்தினியை வென்றது குறிப்பிடத்தக்கது.