மகேந்திர சிங் தோனி மற்றும் இளம் இந்தியா கிரிக்கெட் வீரர்கள் தரையில் உட்கார்ந்து உணவு சாப்பிடும் போட்டோ.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகேந்திர சிங் தோனி டீம் தற்போது ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் இருக்கிறது. இந்நிலையில் ஜிம்பாப்வே நாட்டுடனான தனது நெருக்கம் குறித்து மனம் திறந்துள்ளார் டோணி.


ஜிம்பாப்வே எனக்கு ஸ்பெஷல் நாடு என்று அவர் புகழாரம் சூட்டியுள்ளார். இந்திய அணியில் இடம் பிடிக்கும் முன்பு, 2004-ம் ஆண்டு ஜிம்பாப்வேயில் இந்தி ஏ அணியின் சுற்றுப்பயணத்தில் நானும் இடம்பெற்றிருந்தேன். இங்குதான் நான் பிரபலமாகி இந்திய அணியில் இடம் பிடித்தேன் என்று டோணி கூறியுள்ளார். ஜிம்பாப்வே வரும்போதெல்லாம் நான் மிகவும் மகிழ்சியாக இருக்கிறேன். இது எனக்கு மூன்றாவது சுற்றுப்பயணம் என்றும் தெரிவித்தார்.


மேலும் தனது சக வீரர்களுடன் தரையில் உட்கார்ந்து உணவை பகிர்ந்து சாப்பிடும் போட்டோ தற்போது வைரலாக சமுக வலைத்தளங்களில் பரவி வருகிறது.