IPL தொடர்களில் 150 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டவர் என்ற பெருமையினை MS டோனி பெற்றுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

IPL 2018 தொடரின் போட்டிகள் தற்போது விருவிருப்பாக நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் போட்டிகள் இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைப்பெற்று வருகிறது.


இந்தாண்டின் 11-வது சீசனிலும் சென்னை அணியின் கேப்டன் பொருப்பில் டோனி செயல்பட்டு வருகிறார். அதாவது சென்னை அணியின் கேப்டனாக டோனி செயல்படும் 9-வது சீசன் இது.


இதர அணிகளில் கேப்டன் மாறி மாறி இடம்பெற்று வருகின்றனர். ஆனால் சென்னை அணியை பொருத்தவரை டோனி தான் நிரந்தர கேப்டன். இந்நிலையில் நேற்று PL 2018 தொடரின் 27-வது போட்டி புனே மைதானத்தில் சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடைப்பெற்றது.



இப்போட்டியில் சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. என்றபோதிலும் இப்போட்டியில் சென்னை வீரர்கள் ரசிகர்களை ஏமாற்றாமல் ஆரவாரப்படுத்தினர் என்பது தான் உன்மை. மேலும் இப்போட்டியான தல டோனி கேப்டனாக பங்கேற்க்கும் 150-வது போட்டியாக அமைந்தது.


36-வயதாகும் டோனி நடப்பு IPL தொடரில் தன் பங்கிற்கு செம்மையாக செயல்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது!