வருகின்ற IPL 2018-ல் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துச்சு ஆலோசகராக, இலங்கையின் மலிங்கா களமிறங்குகிறார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் வருடாந்திரம் நடத்தப்படும் IPL போட்டிகளில் இந்த ஆண்டு நடைப்பெறும் போட்டியில் மும்பை அணிக்கான பந்துவீச்சு ஆலோசகராக இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா களமிறங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.


சமீபத்தில் இந்தாண்டுக்கான IPL ஏலம் பெங்களூருவில் நடைப்பெறுகையில், மலிங்காவினை மும்பை இந்தியன்ஸ் அணி உள்பட எந்த அணியும் ஏலம் எடுக்க முன்வரவில்லை. 


இதுகுறித்து உள்ளூர் ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில் "இளம் வீரர்களை கொண்டு அணிகளை அமைப்பதில், ஏலத்தில் அணிகள் தீவரம் காட்டியது. எனவே என்னை ஏலம் எடுக்காதது எனக்கு வருத்தம் அளிக்கவில்லை, எனினும் கடந்தாண்டில் IPL போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை எடுத்தபோதிலும் இலங்கை அணியில் விளையட வாய்ப்பு கிடைக்காததே எனக்கு வருத்தம் அளிக்கிறது" என குறிப்பிட்டிருந்தார்.



இந்நிலையில் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி மலிங்காவை தங்கள் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக நியமித்து இருப்பதாக தெரிவித்துள்ளது!