இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும், பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவுக்கும் இடையே பிரச்சனை நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், விராட் கோலி அந்த கருத்தை மறுப்பு தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பவர் அனில் கும்ப்ளே. இவருக்கும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கும் இடையே மோதல் இருப்பதாக கூறப்படுகிறது. 


இதனையடுத்து, நேற்று நடைபெற்ற பயிற்சியிலும் விராட் கோலி ஈடுபடவில்லை. இந்நிலையில், இந்த குற்றச்சாட்டை அவர் நேற்று மறுத்துள்ளார். இங்கிலாந்தில் செய்தியாளர்களை சந்தித்த விராட் கோலி, தனக்கும் கும்ப்ளேவுக்கும் எந்த பிரட்சனையையும் இல்லை என தெரிவித்துள்ளார்.