இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்ததாக விராட் கோலி மீது பலரும் பித்து பிடித்து இருக்கிறார்கள். ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோலி ஐபிஎல் ஒரே சீசனில் 900 ரன்களுக்கும் மேலாக அடித்திருக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால் சமீபமாக அவர் ஃபார்ம் அவுட்டில் தவித்துவருகிறார். குறிப்பாக அவர் சதம் அடித்த கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. நடப்பு ஐபிஎல் தொடரிலும் அவர் ரன்கள் எடுக்க திணறிவருகிறார்.



இதனால் அவருக்கு சிறிது காலம் ஓய்வு கொடுக்க வேண்டுமென பலர் கூறுகின்றனர். ஆனால் விராட் கோலி கிங் கோலியாக மீண்டும் விரைவில் வருவார் என அவரது ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.


மேலும் படிக்க | சென்னை அணியில் இருந்து தோனி வெளியேறினால்....பாக்.வீரரின் ஆருடம்


நேற்று பஞ்சாப்புக்கு எதிராக கோலி விளையாடியதை பார்த்த ரசிகர்கள் இந்தப் போட்டியிலேயே கிங் கோலி மீண்டும் வரப்போகிறார் என எதிர்பார்த்திருந்தனர். விராட் கோலியின் ஆட்டமும் அப்படித்தான் இருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக 20 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் அவரும், ரசிகர்களும் விரக்தியின் உச்சத்துக்கே சென்றனர்.


 



இந்நிலையில் விராட் கோலி குறித்து பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் அணி தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.


மேலும் படிக்க | ராயுடு ஓய்வா... என்ன சொல்கிறது சென்னை அணி?


அதில், “விராட் கோலி, களத்தில் நீடிக்கும் வரை நாங்கள் கூட ரசித்தோம். அதிர்ஷ்டம் விரைவில் உங்கள் பக்கம் திரும்பும் என்று நம்புகிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவு தற்போது வைரலாகிவருகிறது.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR