சென்னை: சென்னை பட்டினப்பாக்கம் எம்ஆர்சி நகர் அருகே இன்று அதிகாலையில் சுமார் 1.30 மணிக்கு வேகமாக வந்த சொகுசுகார் மரத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த விபத்தில் கார் பந்தைய வீரர் அஸ்வின் சுந்தரும் அவரது மனைவியும் பரிதாபமாக மரணமடைந்தனர். உயிரிழந்த கார் பந்தைய வீரர் அஸ்வின் தேசிய அளவில் நடைபெற்ற கார் பந்தையங்களில் பங்கேற்று சாம்பியன் பட்டம் பெற்றவர் என்று தெரியவந்துள்ளது. 


இந்த விபத்தில் மரணம் அடைந்த பிரபல கார் பந்தய வீரர் அஸ்வின் சுந்தர் ஒட்டி வந்த பிஎம்டபிள்யூ பட்டினப்பாக்கம் எம்ஆர்சி நகர் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி மரத்தில் வேகமாக மோதியது இந்த விபத்தால் காரில் தீ வேகமாக பரவியது. இதில் காரில் பயணம் செய்த கார் பந்தய வீரர் அஸ்வின் சுந்தர் மற்றும் அவரது மனைவி நிவேதிதா ஆகியோர் உடல் கருகி உயிரிழந்தனர்.