இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழுவினர் நாக்பூரில், 4-வது இந்திய அணியை இன்று தேர்வு செய்ய இருக்கிறார்கள். டெல்லியில் டிசம்பர் 2-ம் தேதி நடைபெற இருக்கும் இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட், மற்றும் அதைத் தொடர்ந்து நடக்கும் 3 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி-20 போட்டி, தென்னாப்பிரிக்க தொடர் ஆகியவற்றுக்கான இந்திய அணி இன்று தேர்வு செய்யப்பட உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதைத் தொடர்ந்து, இந்திய அணியில் தொடர்ந்து விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலிக்கு அடுத்து வரும் இலங்கைக்கு எதிரான போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட இருக்கிறது. எனவே, கடைசி டெஸ்ட்டுக்கு ரஹானே கேப்டனாக பொறுப்பு ஏற்கிறார். 


ஒரு நாள் மற்றும் டி-20 போட்டிக்கு ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என்று கூறப்படுகிறது.