IPL 2019 தொடரின் 40-வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசதில் அபார வெற்றி பெற்றது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

IPL 2019 தொடரின் 40-வது லீக் ஆட்டம் ஜெய்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நடைப்பெற்றது. இப்போட்டியில் ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளும் மோதின.


இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்து விளையாடிது. இதனையடுத்து முதலாவதாக பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர் எனினும் துவக்க வீரராக களமிறங்கிய ரஹானே இறுதி வரை ஆட்டமிழக்காமல் அதிரடியாக விளையாடி 105*(63) ரன்கள் குவித்து அணி பலம் சேர்த்தார். இவருக்கு துணையாக அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் 50(32) ரன்கள் குவித்தார். 


இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் இழந்து 191 ரன்கள் குவித்தது. டெல்லி அணியின் ரபாடா 2 விக்கெட் வீழ்த்தினார்.


இதனையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. துவக்க வீரர்களா களமிறங்கிய பிரித்திவி ஷா 42(39, ஷிகர் தவான் 54(27) ரன்கள் குவித்து வலுவான துவக்கத்தை அளித்தனர். இவர்களை தொடர்ந்து வந்த ரிஷாப் பன்ட் இறுதி வரை ஆட்டமிழக்காமல் நின்று 78*(36) குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். ஆட்டத்தின் 19.2-வது பந்தில் 193 ரன்கள் குவித்து வெற்றி இலக்கை எட்டிய டெல்லி அணி IPL 2019 தொடரில் தனது 7-வது வெற்றியை பதிவு செய்து முதல் இடத்திற்கு முன்னேறியது.