குறைந்த ஓவர் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலியை விட ரோஹித் சர்மா சிறந்து விளங்குவதாக முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பாட்டீல் கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இலங்கைக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இரட்டைச் சதம் மற்றும் டி20 போட்டியில் சதம் அடித்து அசத்தியவர் ரோஹித் சர்மா.


தனியார் தொலைக்காட்சியில் பேசிய முன்னாள் இந்திய வீரர் சந்தீப் பாடீல் கூறுகையில்:-


குறைந்த ஓவர்கள் கிரிக்கெட்டில் கோலியைக்காட்டிலும் சிறப்பாக ஆடுகிறார் ரோஹித் சர்மா. இப்படி நான் கூறுவது கூறுவது பிடிக்காது. 


விராட் கோலி தற்போது கிரேட் பேட்ஸ்மென் என்பது சந்தேகம் கிடையாது. அவர் இந்தியாவின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மென். ஆனால் குறைந்த ஓவர் கிரிக்கெட் என்று வரும்போது ரோஹித் அவரைத் தாண்டியுள்ளார்.


தென் ஆப்பிரிக்காவில் கோலி ரன் குவிப்பில் ஈடுபடுவார் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். ஆனால் இந்த ஆண்டு குறைந்த ஓவர்கள் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா அசாத்தியமாக ஆடியுள்ளார். 


என்று சந்தீப் பாட்டில் தெரிவித்துள்ளார்.