இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா, ஒருநாள் போட்டிகளில் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவர் என முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரோஹித் சர்மா டேடி சதங்கள் (140 ரன்களுடன் ஓர் சதம்) அடிக்கும் திறமை கொண்டவர் எனவும், தான் பார்த்த தொடக்க ஆட்டக்காரர்களில் ரோஹித் ஒரு சிறந்த தொடக்க ஆட்டக்காரர் எனவும் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.


READ | ரோஹித் ஷர்மாவை தனது விருப்பமான பேட்ஸ்மேனாக தேர்ந்தெடுத்தார் டுமினி!...


ரோஹித் தனது 29 ஒருநாள் சதங்களில், 11 முறை 140-க்கும் அதிகமான ரன்களுடன் சதம் அடித்துள்ளார், இதில் மூன்று இரட்டை சதங்களும் அடங்கும்.


தனது விளையாட்டு நாட்களில் ரோஹித் சர்மாவின் மிகப் பெரிய தரம் என்னவென்றால், அவருடைய மிகப்பெரிய சதங்கள் மற்றும் இரட்டை சதங்கள். இது ஆச்சரியமான ஒன்று" என்று குறிப்பிட்டுள்ளார்.


READ | ரோகித் ஷர்மாவுக்கு பெண் வேடமிட்டால் எப்படி இருக்கும்...? நீங்களே பாருங்கள்!...


"ஒருநாள் போட்டிகளில் நாம் இப்போது 150, 180, 200 என பெரிய இலக்குகளை எட்டி பயணிக்கின்றோம். சற்று சிந்தித்து பாருங்கள் இதற்கு யார் காரணம் என்று. அதுதான் ரோஹித்தின் பெருமை" என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


உங்கள் தகவலுக்கு : 30 வயதாகும் ரோஹித் இதுவரை 224 ஒருநாள் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடியுள்ளார், சராசரியாக 49.27 விகிதத்தில் 9115 ரன்கள் எடுத்துள்ளார். இதில்  29 சதங்கள் மற்றும் 43 அரைசதங்கள் அடங்கும். இவரது அதிக ஒருநாள் ரன் 264 ஆகும், இது உலக சாதனையும் கூட 32 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 2141 ரன்கள் எடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.