இந்தியா - மேற்கிந்திய அணிகளுக்கு இடையே நடைப்பெற்ற நான்காவது ஒருநாள் போட்டியில் ரசிகர்கள் "ரோகித் ரோகித்" என முழக்கமிட... அவர் ரசிகர்களிடன் "இந்தியா இந்தியா" என முழக்கமிடுமாறு தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா - மேற்கிந்திய அணிகளுக்கு இடையே நடைப்பெற்ற நான்காவது ஒருநாள் போட்டி கடந்த 29-ஆம் நாள் மும்பையின் பார்பொர்ன் மைதானத்தில் நடைப்பெற்றது. இப்போட்டியில் இந்தியா 224 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 



இப்போட்டியில் இந்திய வெற்றி பெற முக்கியமான காரணமாக அமைந்தவர் ரோகித் ஷர்மா. 137 பந்துகளில் 162 ரன்கள் குவித்து வெளியேறினார். இப்போட்டியில் ரோகித் இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரசிகர்களை ஏமாற்றி வெளியேறினார். எனினும் அவரது அசூர ஆட்டம் ரசிகர்களுக்கு நல்ல தீனீயாய் அமைந்தது.


இந்தியாவின் இமாலைய ரன் இலக்கை எதிர்கொண்டு விளையாடி மேற்கிந்தியா போராடி தோல்வி அடைந்தது. இதற்கிடையில் இந்தியா பந்துவீச்சு மேற்கொண்டு இருந்தபோது, ஆர்வமிக்க ரசிகர்கள் "ரோகித் ரோகித்" என முழக்கமிட்டனர், ஆனால் ரோகித் "இந்தியா இந்தியா" முழக்கம் எழுப்புமாறு ரசிகர்களிடன் கேட்டுக்கொண்டார்.


இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது!