இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி மட்டையாளர் ரோகித் ஷர்மாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய கிரிக்கெட் அணியின் ஹிட் மேன் ரோகித் ஷர்மா மற்றும் அவரது மனைவி ரித்திக்கா சாட்ஜே ஆகியோருக்கு முதல் பெண் குழந்தை பிறந்துள்ளது. மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்து ரித்திக்கா ஞாயிறு அன்று அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.


இந்த செய்தியினை பிரபல பாலிவுட் நடிகர் சொஹைல் கான் மனைவி சீமா கான் தனது இன்ஸ்டாகிராம் வாயிலாக தெரிவித்துள்ளார். 



இதனையடுத்து வரும் ஜனவரி 3-ஆம் நாள் நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் ரோகித் ஷர்மா விளையாட மாட்டர் எனவும், இந்தியாவிற்கு திரும்புகின்றார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ரோகித் - ரித்திக்கா தம்பதியருக்கு கடந்த டிசம்பர் 13, 2015-ஆம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றது. சமீபத்தில் தனது மனைவி கருவுற்று இருப்பதினை பகிரங்கமாக வெளிப்படுத்திய ரோகித் ஷர்மா, விரைவிர் தந்தையாக போவதை என்னி பெருமை படுவதாக குறிப்பிட்டிருந்தார்.


இந்நிலையில் தற்போது இவர் தந்தை ஆகியுள்ள செய்தி அவரது ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது!