இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரோஹித் ஷர்மா, அமெரிக்காவில் நடைபெற்ற பேஸ்பால் போட்டியை பந்து வீசி தொடங்கி வைத்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக இருப்பவர் ரோஹித் ஷர்மா. இவர், ஒரு நாள் போட்டிகளில் 3 முறை இரட்டை சதம் அடித்த ஒரே வீரர் என்பது உள்ளிட்ட பல சாதனைகளை படைத்துள்ளார். முன்னணி கிரிக்கெட் வீரரான ரோஹித், தனது மனைவி ரித்திகா உடன், தற்போது அமெரிக்காவில் வலம்வந்து கொண்டிருக்கிறார்.


இதற்கிடையே, சியாட்டில் நகரில் நடைபெற்ற பேஸ்பால் போட்டியில் இவர் கலந்து கொண்டு பந்துவீசி போட்டியை தொடங்கி வைத்துள்ளார். இந்த கவுரவத்தை பெற்ற முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை ரோஹித் பெற்றுள்ளார். பின்னர், அவர் தனது மனைவி ரித்திகா உடன் இந்த போட்டியை கண்டு களித்தார். ரோஹித் ஷர்மா, பேஸ்பால் விளையாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.