ஜகார்த்தா: இந்தோனேசிய மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரில், 21-13, 21-19 என்ற நேர் செட்களில் PV சிந்து -வை தோற்கடித்து சாய்னா நேவால் அரையிறுதிக்கு முன்னேறினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆட்டத்தின் முதற்பாதியில் போட்டியை எளிதாக தன்வசம் ஆக்கிக்கொண்ட சாய்னா, இரண்டாவது பாதியில் மீண்டும் தனது ஆதிக்கத்தினை செலுத்தி எளிதாக நேர் செட் கணக்கில் வெற்றிப் பெற்றார்.


முதல் சுற்றில் சாய்னா 21-13 என்ற கணக்கில் வெற்றி வாய்பினை எளிதாக்கினாலும், இரண்டாவது சுற்றில் சிந்து, 7-3 என்ற கணக்கில் முன்னிலை வகித்தார். சுதாரித்துக்கொண்ட சாய்னா அடுத்தப்படியாக ஆட்டத்தில் விருவிருப்பேற்றி 5-9 என்ற கணக்கினை கொண்டுவந்தார்.



இறுதியாக ஆட்டத்தின் முடிவில் சாய்னா 21-19 என்ற புள்ளிகளில் ஆட்டத்தினை முடிவுக்கு கொண்டு வந்தார். இதனால் 21-13, 21-19 என்ற நேர் செட்களில் PV சிந்து -வை தோற்கடித்து சாய்னா நேவால் அரையிறுதிக்கு முன்னேறினார்.