இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை சாய்னா நேவால் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால், ஸ்பெயினின் கரோலினா மரினை எதிர்கொண்டார்.


விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், சாய்னா 4-10 என பின்தங்கிய நிலையில் இருந்தபோது, கரோலினா மரினுக்கு தொடைப்பகுதியில் (hamstring injury) காயம் ஏற்பட்டது. இதனால் போட்டியில் இருந்து விலகினார். இதனையடுத்து சாய்னா நேவால் சாம்பியன் பட்டம் வென்றார் என அறிவிக்கப்பட்டது.


இப்போட்டியில் கரோலின் மரின் 10-4 என முன்னிலை வகித்தபோது, சாய்னா நேவால் அடித்த பந்தை தாவி அடிக்க முற்பட்டபோது கரோலினா மரினுக்கு வலது காலில் காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக வெறும் 4 புள்ளிகளை பெற்று சாய்னா நேவால் இந்தோனேசியன் பேட்மிண்டன் பட்டம் வென்று அதிசயம் புரிந்துள்ளார்.



முதல்முறையாக இந்தோனேசியா மாஸ்டர்ஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ள சாய்னாவிற்கு, இந்திய கிரிக்கெட் அணியின்  முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.