பிரன்ச் ஓபன் காலிறுதி போட்டியில் இந்தியாவின் சாய்ன நேவால் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரன்ச் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டிகள் பாரீஸ் நகரில் நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் பெண்கள் ஒற்றையர் காலிறுதி போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் மற்றும் தாய் சூ யிங் போட்டியிட்டனர். பரபரப்பாக சென்ற இப்போட்டியில் இந்தியாவின் சாய்னா 22–20, 21–11 என்ற நேர் செட் கணக்கில் சீன தாய்பி வீரங்கனை தாய் சூ யிங்-யிடன் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.


முன்னதாக கடந்த அக்டோபர் 21-ஆம் நாள் நடைப்பெற்ற டென்மார்க் ஓபன் இறுதி போட்டியில் தாய் சூ யிங்-கிடம் 13-21, 21-13, 6-21 என்ற செட் கணக்கில் சாய்னா நேவால் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.


லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற சாய்னா நேவால் உலக தரவரிசையில் 1-வது இடத்தில் இருக்கும் தாய் சூ யிங் உடன் இதுவரை 19 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளார். இதில் 14 போட்டிகளில் தாய் சூ யிங் வெற்றி பெற்றுள்ளார். வெறும் 5 போட்டிகளில் மட்டும் சாய்னா வெற்றி பெற்றுள்ளார்.


இதற்கு முன்னதாக இவர்கள் இருவருக்கும் இடையே நடைப்பெற்ற போட்டிகளில் கடந்த 2013-ஆம் ஆண்டு நடைப்பெற்ற ஸ்விஸ் ஓபன் போட்டியில் சாய்னா வெற்றி பெற்றார். இதனையடுத்து நடைப்பெற்ற 12 போட்டிகளிலும் சாய்னா தோல்வியை தழுவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது!