டெல்லி: ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் ஆதரவு தெரிவித்துள்ளதோடு, தமிழக மக்களின் அறப்போராட்டத்திற்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டுவர வலியுறுத்தியும், அலங்காநல்லூர் போராட்டக்காரர்கள் மீது நடந்த அடக்குமுறைகளுக்கு எதிராகவும் மாநிலம் முழுக்க இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், தனது டிவிட் ஒன்றின் மூலம் ஜல்லிகட்டை பற்றி வெளியிட்டார். அதில்:-


தமிழகத்தில் நடைபெறும் போராட்டம் அமைதி வழியில் செல்வதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. அமைதிவழியை தொடருங்கள். இந்த அறப்போராட்டம் எல்லோருக்கும் பாடம் என கூறியுள்ளார்.