இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங் குலி, நேற்று தனது 45-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதை முன்னிட்டு பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சவுரவ் கங்குலியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.


முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின், தனது டிவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:-


“உங்களுடன் கிரிக்கெட் விளையாடுவது எப்போதும் இன்பமான அனுபவமாக இருந்துள்ளது. உங்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.


வீரேந்தர் சேவக் வெளியிட்ட வாழ்த்து செய்தி:-


“இந்தியாவின் கொடி உயரமாக பறக்க எப்போதும் உதவியாக இருக்க வேண்டும். டெஸ்ட் கிரிக் கெட் போட்டிகளில் என் வெற்றி களுக்கு உங்கள் ஒத்துழைப்பே காரணம்” என்று கூறியுள்ளார்.


ஹர்பஜன் சிங் வெளியிட்ட வாழ்த்து செய்தி:-


“நீங்கள் எப்போதுமே எனக்கு உந்து சக்தியாக இருந்துள்ளீர்கள். உங் களுக்கு என் பிறந்தநாள் வாழ்த் துகள்” என்று கூறியுள்ளார்.


இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆகியவையும் சவுரவ் கங்குலிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.