IPL 2019 தொடரின் 36-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி போராடி வெற்றி பெற்றது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

IPL 2019 தொடரின் 36-வது லீக் ஆட்டம் ஜெய்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நடைப்பெற்றது. இப்போட்டியில் ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.


இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்து விளையாடியது. இதனையடுத்து மும்பை அணி தரப்பில் துவக்க வீரர்களாக களமிறங்கிய குவிண்டன் டீ காக் 65(47) மற்றும் ரோகித் ஷர்மா 5(7) ரன்கள் குவித்தனர். இவர்களை தொடர்ந்த களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 34(33), ஹார்திக் பாண்டயா 23(15) குவித்தனர். 


நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கட் இழப்பிற்கு 161 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் ஸ்ரேயஸ் கோபால் 2 விக்கெட் குவித்தார்.


இதனையடுத்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. 


துவக்க வீரராக களமிறங்கிய ரஹானே 12(12), சாம்சன் 35(19) ரன்களில் வெளியேற முதலாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஸ்டீவன் ஸ்மித் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 59*(48) ரன்கள் குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். இவருக்கு துணையாக ரியான் பார்க் 43(29) ரன்கள் குவித்தார்.


ஆட்டத்தின் 19.1-வது பந்தில் வெற்றி இலக்கை எட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி IPL 2019 தொடரில் மூன்றாவது வெற்றியை பதிவு செய்து 6 புள்ளிகளுடன் 5-வது இடத்திற்கு முன்னேறியது.