சிட்னி ஓபன் டென்னிஸ் தொடரில் சானியா மிர்சா ஜோடி பைனலுக்கு தகுதி பெற்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சர்வதேச சிட்னி டென்னிஸ் தொடரில் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் செக்குடியரசின் பார்போரா டிரைகோவா ஜோடி சேர்ந்து கலந்திக்கொண்டனர்.


நடந்து முடிந்த அரையிறுதியில் போட்டியில் சானியா மிர்சா, பார்போரா டிரைகோவா ஜோடி, அமெரிக்காவின் மேடிசன் பிரங்கெல், ஆஸ்திரேலியாவின் அரினா ரோடினோவா ஜோடியை சந்தித்தது. இதில் துவக்கம் முதல் அசத்திய சானியா ஜோடி முதல் இரண்டு  செட்டையும் கைப்பற்றி எளிதாக இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றது.இறுதிச்சுற்றில் ஹங்கேரியின் தைமியா பாபோஸ், ரஷ்யாவின் அனஸ்தாஸ்தியா ஜோடியை சானியா ஜோடி எதிர்கொள்கிறது.