நாடு முழுவதும் விஜய் ஹசாரே தொடர் கடந்த நவ. 12ஆம் தேதி தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதல் தர போட்டியான இத்தொடர், ஒருநாள் போட்டி வடிவத்தில் நடைபெறும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதில் மொத்தம், 40 அணிகள் விளையாடுகின்றன. இவை 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒரு பிரிவில் தலா 8 அணிகள் இடம்பிடித்துள்ளது. இதில், ஒவ்வொரு அணியும் தனது  பிரிவில் இருக்கும் அணியுடன் தலா 1 முறை மோதும். பின்னர், பின்னர் காலிறுதிக்கு முந்தைய சுற்று, காலிறுதி, அரையிறுதி, இறுதிப்போட்டி என தொடர் வரும் டிசம்பர் 2ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. 


கடந்த 2002-03ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த தொடர், ரஞ்சி கோப்பையின் ஒருநாள் போட்டி வடிவம் என அறியப்படுகிறது. இந்த தொடரை தமிழ்நாடு அணி 5 முறை வென்றுள்ளது. மேலும், 2016க்கு பின் மீண்டும் சாம்பியனாக வேண்டும் என்ற முனைப்பில் தமிழ்நாடு அணி, நடப்பு தொடரை விளையாடி வருகிறது.