இந்தியா-இலங்கை அணிகளுக்கு எதிரான டி20 தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனால், மூன்று போட்டிகள் கொண்ட இருபது ஓவர் போட்டித் தொடரில் இலங்கை அணியை ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவிடாமல், க்ளீன் ஸ்வீப் செய்தது இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி.


முன்னதாக, முதல் இரண்டு டி20 போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய இந்திய அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது. 



இன்று தர்மசாலாவில் நடைபெற்ற  இந்தத் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில்,  டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 


தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி 20 ஓவர்களில் 146 ரன்கள் எடுத்தது.


மேலும் படிக்க | இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி  


இலங்கை அணியின் கேப்டன் தசுன் சனகா  அதிரடியாக விளையாடி, 38 பந்துகளில் 74 ரன்கள் குவித்தார். 



147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்ய களம் இறங்கியது இந்திய அணி. தொடக்க வீரர்களாக ரோஹித்சர்மா மற்றும் சம்சு சாம்சன் களம் இறங்கினார்கள்.  


19 பந்துகள் மீதம் இருந்த நிலையில், இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இலங்கை அணியை டி-20 தொடரில் க்ளீன் போல்ட் ஆக்கியது.


மேலும் படிக்க | மும்பை இந்தியன்ஸூக்கு எதிராக மற்ற ஐபிஎல் அணிகள்..!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR