இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்நிலையில் ஒருநாள் போட்டிகளுக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் உபுல் தரங்கா நீக்கப்பட்டுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய அணியுடனான ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளுக்கு ஆல்ரவுண்டர் திஷாரா பெரரா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். 28-வயதுடைய திஷாரா பெரரா இலங்கை அணிக்காக 125 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். 


உபுல் தரங்கா கேப்டனாக பதவியேற்ற பின் இலங்கை அணி தொடர்ந்து சரிவை சந்தித்தது. இந்த ஆண்டு இந்தியா, பாகிஸ்தான், தேன் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடர்களில் இலங்கை அணி தோல்வியை சந்தித்தது. 


இந்திய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணி விளையாடுகிறது. இதன் முதல் போட்டி வரும் 10-ம் தேதி தர்மசாலாவில் நடைபெறுகிறது.