கொரோனா நெருக்கடி காரணமாக கடந்த வருடம் நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் (Olympic Games 2020) ஒரு வருடம் கழித்து ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகிறது. இந்த போட்டிகள் இன்று முதல் கோலாகலமாக தொடங்கியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க நாளான இன்று இந்தியா சார்பாக தீபிகா குமார் (Deepika Kumari), அட்டானு தாஸ் ஆகிய வில்வித்தை வீரர், வீராங்கனைகள் முதல் கட்ட போட்டிகளில் ஆடுகிறார்கள். வில்வித்தை போட்டியின் பெண்களுக்கான ரேங்கிங் சுற்றுகள் இன்று நடைபெற்றன. மொத்தம் 12 சுற்றுகள் தொடரில் நடைபெற்றது. இதில் ஒரு சுற்றுக்கு தலா 6 முறை வில்களை ஏவ வேண்டும்.


ALSO READ | 2032 ஒலிம்பிக் போட்டிகளை ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நடத்தவுள்ளது: IOC


அதன்படி இந்திய வீராங்கனை உள்பட 64 பேர் கலந்து கொண்டார்கள். ஒரு சுற்றுக்கு 6 அம்பு என 72 முறை ஒவ்வொரு வீராங்கனைகளும் அம்புகளை எய்தனர். இதில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி 663 புள்ளிகள் பெற்று 9வது இடத்தை பிடித்தார்.


இந்த ரேங்கிங் சுற்றில் 616 புள்ளிகள் பெற்ற பூட்டானின் கர்மா என்ற வீராங்கனையுடன் குழு சுற்றில் தீபிகா குமாரி மோதுவார். இந்த ரேங்கிங் சுற்றில் முதல் இடத்தை கொரியாவின் ஆன் சான் பிடித்தார். இவர் 12 சுற்றுகள் முடிவில் 680 புள்ளிகள் பெற்றார். இது புதிய உலக சாதனையாகும். 


ALSO READ | 'Anti-sex' beds: டோக்கியோ ஒலிம்பிக்கில் 'பாலியல் எதிர்ப்பு' படுக்கைகள்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR