இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி டி20 போட்டிகளில் கேப்டனாக அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் டோனியின் மிஞ்சவுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சாதனையினை படைக்க விராட் கோலிக்கு இன்னும் 25 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. தற்போது இந்த பட்டியலில் எம்.எஸ். தோனி (1,112), நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் (1148), தென்னாப்பிரிக்காவின் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் (1,273) என தங்கள் இருப்புகளை பதிவு செய்ய நான்காம் இடத்தில் விராட் கோலி உள்ளார். நாளை நடைபெற இருக்கும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் கோலி 25 ரன்கள் எடுத்தால் அவர் இந்திய கிரக்கெட் அணியின் முன்னாள் தலைவர் டோனியை பின்னுக்கு தள்ளுவார் என்பது குறிப்பிடத்தக்கது.


அதேவேளையில் டி20 போட்டிகளில் கேப்டனாக 50 சிக்ஸர்களை அடித்த இரண்டாவது கேப்டனாகவும் கோலி பெயர் பெறுவதற்கான சாத்தியகூறுகளும் இந்த போட்டியில் உள்ளது. தற்போது இந்த பட்டியலில் இங்கிலாந்தின் ஈயோன் மோர்கன் முதலாவதாக இடம் பிடித்துள்ளார். தற்போது அந்த பட்டியலில் கோலி சேருவதற்கு ஏழு அதிகபட்ச ரன்கள் மட்டுமே தேவை.


ஞாயிற்றுக்கிழமை ஆக்லாந்தில் நடந்த இரண்டாவது டி20 போட்டியில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதால் இந்தியா மீண்டும் நியூசிலாந்தை விஞ்சியது.


இப்போட்டியில் தொடக்க ஆட்டக்காரர் கே.எல் ராகுல் தனது இரண்டாவது அரைசதத்தை பூர்த்தி செய்து இந்தியாவை வழிநடத்தினார். இதன்மூலம் இந்திய கிரிக்கெட் அணி மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து அபார வெற்றியினை பதிவு செய்தது. இதனையடுத்து வரும் ஜனவரி 29 அன்று இவ்விரு அணிகளும் மீண்டும் மூன்றாவது டி20 போட்டியில் களம்காணுகின்றன. 


இப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் தொடரை வெல்லும், அதேவேளையில் நியூசிலாந்து அணி தோல்வி பெற்றால் தொடரை இழக்கும். தொடை நியூசிலாந்து தக்க வைத்துக்கொள்ள அடுத்து வரும் மூன்று போட்டிகளிலும் நியூசிலாந்து வெற்றி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.