இலங்கைக்கு எதிரான 3_வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் 3-வது வெற்றியைப் பெற்றிருக்கும் இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றதோடு, தொடரையும் கைப்பற்றியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக நேற்று இந்த போட்டியில் இலங்கை ரசிகர்கள் மைதானத்தில் பாட்டில்களை வீசி ரகளையில் ஈடுபட்டதால், டோனி மைதானத்தில் குட்டித்தூக்கம் போட்டார்.


44-வது ஓவரில் இந்திய அணி 210 ரன்கள் எடுத்திருந்த போது, இலங்கை ரசிகர்கள் மைதானத்தில் பாட்டில்களை வீசி ரகளையில் ஈடுபட்டனர். இதனையடுத்து போட்டி நிறுத்தப்பட்டது. அந்த நேரத்தில் மைதானத்தில் இருந்த டோனியும் ரோகித்தும் ஜாலியாக அமர்ந்து பேசினர். டோனி அப்படியே குட்டித்தூக்கம் போட்டார். பின்னர் மீண்டும் போட்டி தொடங்கி இந்திய அணி வெற்றி பெற்றது. 


வீடியோ பார்க்க:-